Thursday, July 8, 2010

காதல்., காதல்., காதல்...!!


வணக்கம் சொல்லி
சந்திக்கையிலும்..,

வருகிறேன் என
விடைபெறுகையிலும்..,

இயல்பாய் பேசி
விலகுகிறாய் நீ..

இயக்கமே தடைப்பட்டு
நிற்கிறேன் நான்..

................................................................................

" நீதான் " என்று சொல்ல
உனக்கு தைரியம் இல்லை..

" நானா..? " என்று கேட்க
எனக்கும் தெம்பில்லை..

உன் கவிதைப் பெண் யாரடா..??!!

............................................................................................

இருபது நிமிடம்
தாமதமாய் வந்த
என்னை திட்டுகிறாய் நீ..,

இருபத்தியொரு வருடம்
தாமதமாய் வந்த
உன்னை

எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது
என் காதல்..!

..........................................................................................

நீ கேட்டுக் கொண்டதால்
இந்த கவிதையைக் கூட
அழகாகவே எழுத
ஆசைப்படுகிறேன்..

ஆனாலும்
எழுதப்போவதில்லை..

காதலை விடவும்
அழகான ஒன்று
நமக்கெதற்கு..??!!

..................................................................................................

பிரிந்து போன நாளில்
எல்லோரும் கொடுத்தார்கள்
நினைவு பரிசு..

நீ மட்டும் கொடுத்தாய்
உன் நினைவுகளை பரிசாக..

........................................................................................................

விக்கலில் நான்
தண்ணீர் குடிப்பதில்லை..,
நினைப்பது நீயாக
இருந்தால் நீடிக்கட்டுமே..!!

( படித்ததில் பிடித்தது...)




No comments:

Post a Comment